சென்னையில் 300க்கும் அதிகமான இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு.. பயமுறுத்தும் பேரிடர் மேலாண்மை
ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் மழை பெய்தால், பெரிய அளவில் சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்று பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் மழை பெய்தால், பெரிய அளவில் சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்று பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்து இருக்கிறது.
தற்போது சென்னையில் மிதமான வெப்பநிலை நிலவுகிறது. கடந்த வாரம் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில்தான் சென்னையில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்து இருக்கிறது. இதற்கு சில காரணங்களையும் அடுக்கி உள்ளது.

மழை பெய்யும்
சென்னையில் இந்த மாதம் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த மாதத்தில் பெரிய அளவில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள மற்ற சில கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளம்
இந்த நிலையில்தான் சென்னையில் வெள்ளம் ஏற்படும் பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி வானிலை ஆய்வு மையம் சொன்னபடியே மழை பெய்தால் கண்டிப்பாக சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்றும் கூறியுள்ளது. முக்கியமாக சென்னையில் மொத்தமும் 300க்கும் அதிகமான இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

எங்கு வெள்ளம்
சென்னையில், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், வண்டலூர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், டி நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், மீனம்பாக்கம், எக்மோர் ஆகிய இடங்களில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 300 இடங்களில், சென்னையின் முக்கியமான பகுதிகள் அடங்கிவிட்டது.

காரணம் என்ன
இதற்கு சில காரணங்களை கூறியுள்ளது. அதன்படி எதிர்பார்த்ததை விட இந்தியாவில் இந்த முறை அதிக மழை இருக்கும். மழையால் நெரிசல் மிகுந்த நகரங்கள் பாதிக்கும். முக்கியமாக சென்னையில் கழிவுநீர் மேலாண்மை, வெளியேற்றம் சரியாக இல்லாததால் அதிக தண்ணீர் தேங்கும். ஏரிகள் சில காணாமல் போய் இருப்பதால் வெள்ளம் ஏற்படும் என்றுள்ளது.

தீவிர ஏற்பாடு
ஆனால் சென்ற சென்னை வெள்ளம் போல இந்த முறை ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெள்ள எச்சரிக்கைக்கு தமிழக அரசு இப்போதே தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. தேவையான ஏற்பாடுகளை ஏற்கனவே தமிழக அரசு எடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. சென்ற முறை போல இந்த முறை செம்பரம்பாக்கம் அவலம் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications