For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை, தென்மாவட்டத்தில் 12 மணி வரை கனமழை வெளுக்கும்... வானிலை மையம்!

சென்னையில் பகல் 11 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது- வீடியோ

    சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பகல் 11 மணி வரையிலும், தென்மாவட்டங்களில் பகல் 12 மணி வரையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது, இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் விட்டு விட்டு கனமழையும் பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வெளுத்து வாங்குகிறது. எனினும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    குமரியில் பலத்த காற்று

    குமரியில் பலத்த காற்று

    கனமழை எதிரொலியால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் 2 செல்போன் டவர்கள் உள்பட் சாலையோர மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன.

    இரவு முதல் பலத்த காற்று, மழை

    இரவு முதல் பலத்த காற்று, மழை

    நேற்று இரவு முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சராசரியாக 34 மிமீ மழை பதிவாகி இருக்கலாம் என்று தெரிகிறது. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை நிலவரம்

    சென்னை நிலவரம்

    இதனிடையே சென்னையில் பகல் 11 மணி வரையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணமாலை, வேலூரிலும் காலை 11 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் 12 மணி வரை

    தென்மாவட்டங்களில் 12 மணி வரை


    தென்மாவட்டங்களில் 12 மணி வரை மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலியில்
    ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்திலும் பகல் 12 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    English summary
    Chennai meteorological department predicts that Chennai may get heavy rains upto 11 o'clock and Southern districts may get heavy rainfall upto 12 noon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X