தண்ணீர் வேண்டுமா?... அப்ப வெப்சைட்ல பதிவு செய்யுங்க... இது சென்னை கொடுமை!
லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை : லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இந்த முறை வரும் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு விட்டதால் மக்கள் குடிநீருக்காக அல்லோகலப்படுகின்றனர்.
அந்தந்த மாவட்ட குடிநீர் வாரியம் தண்ணீர் விநியோகம் செய்துவந்தாலும், அது 20 நாள்களுக்கு முறை, 10 நாள்களுக்கு ஒரு முறை என்றே உள்ளது. கோடை காலத்துக்கு முன்பே மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டு விட்டது.

ஆர்ப்பாட்டம்
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி மக்கள் ஆங்காங்கே சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகளை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கியபோதிலும் இது காலம் கடந்த ஞானம் என்றே கருதப்படுகிறது.

நீர் நிரப்பு மையங்களில்...
சென்னை குடிநீர் வாரியம் தினமும் லாரிகள் மூலம் 6,000 மேற்பட்ட முறைகள் தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றன. லாரி மூலம் தங்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் பெற விரும்புவோர் அருகில் உள்ள நீர் நிரப்பு மையங்களுக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இணையம் மூலம்...
தற்போது பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு www.chennaimetrowater.com என்ற இணையதளத்தில் தங்களுக்கு தேவையான அளவு குடிநீரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

முதலில் வருபவருக்கு...
மேலும் இணையதளம் மூலம் குடிநீர் பெற விரும்புவோருக்கு ‘முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை' அடிப்படையில் தண்ணீர் அனுப்பப்படும். மேலும் பதிவு செய்தவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலும் அனுப்பப்படும். இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து புகாரை அந்த இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

தொலைபேசி மூலம்...
044-4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு வசதியை பயன்படுத்தியும் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டு முறைகளும் 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனினும் நீர் நிரப்பு மையங்களில் தொலைபேசி மூலம் பதிவு செய்யும் முறையும் செயல்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications