சென்னை- மைசூர் சதாப்தி ரயிலில் கூடுதலாக ஏசி பெட்டிகள் இணைப்பு
சென்னை: தெற்கு ரயில்வே சில ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கிறது. அதன்படி சென்னை - மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், பிகானீர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
12007/12008 சென்னை சென்டிரல் - மைசூர் - சென்னை சென்டிரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனிமேல் கூடுதலாக ஒரு ஏசி சேர் கார் இணைக்கப்படும். ஜூன் 29 முதல் இது அமலுக்கு வருகிறது.
12698/12697 திருவனந்தபுரம்- சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை 4ம் தேதி முதல் திருவனந்தபுரத்திலிருந்து ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதியுடந் கூடிய பெட்டியுடன் ஜூலை 5 முதல் சென்னையிலிருந்தும் இணைக்கப்படும்.
22631/22632 சென்னை சென்டிரல் - பிகானீர் அனுவிராத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை 2 முதல் சென்னையிலிருந்து ஒரு ஏசி 3 டயர் பெட்டியும், பிகானீலிருந்து ஜூலை 5 முதலும் இணைக்கப்படும்.
17643/17644 சென்னை எழும்பூர் - காக்கிநாடா சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூன் 28 முதல் சென்னையிலிரு்தும், 29 முதல் காக்கிநாடாவிலிருநு்தும் ஒரு ஏசி 3 டயர் பெட்டி இணைக்கப்படும்.
17652/17651 கச்சிகுடா -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு ஏசி 3 டயர் பெட்டி இணைக்கப்படும்.
12287/12288 கொச்சுவேலி - டேராடன், ஹரித்வார் - கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பரிஸ் ரயிலில் 2 ஏசி 3 டயர் பெட்டிகள், 2 படுக்கை பெட்டிகள், ஒருல லக்கேஜ் கம் பிரேக் வேன் கோச் இணைக்கப்படும்.
16334/16333 திருவனந்தபுரம் வேரவேல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்படும்.
16336/16335 நாகர்கோவில் - காந்திதாம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
16359/16360 எர்ணாகுளம் -பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்படும்.