நீலாங்கரையில் நுரைத்து ஓடும் கழிவுநீர்... நோயில் மக்கள் அவதி- கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்: வீடியோ
சென்னை நீலாங்கரை பகுதியில் கால்வாயில் கழிவு நீர் கலந்து பிரமாண்ட நுரையுடன் செல்வதால் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன. பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூ
சென்னை: சென்னை நீலாங்கரையில் கழிவு நீர் நுரைத்துச் செல்கிறது. அங்குள்ள கால்வாயில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நுரையுண்டாகிறது. இந்த அசுத்த நீரால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அமைந்துள்ளது நீலாங்கரை. தற்போது அது பெரும் செல்வந்தர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழும் பகுதியாக மாறிவிட்டது. அங்கு ஓடும் பெரிய கால்வாயில் அசுத்தமான நீர் ஓடுகிறது. அதுவும் அந்த நீர் வேதிப் பொருட்கள் கலப்பினால் பிரமாண்டாமாக நுரைத்து ஓடுகிறது.

இந்த நுரை நீரால் தோல் வியாதிகள் ஏற்படுவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக அந்த தண்ணீரில் இருந்து வரும் துர்நாற்றத்தால் தொண்டையில் பிரச்சனை ஏற்படுகிறது. பலருக்கு ஹார்மோன் பிரச்சனை உண்டாகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அங்கு வாழும் மக்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வதிகள் என பலரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை மறியல் போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை என விரக்தியுடன் கூறுகின்றனர். அதிகாரிகள் கண்ணில் இந்த மக்களின் பிரச்சனை படுமா? தீர்வு கிட்டுமா?












Click it and Unblock the Notifications