வெள்ளத்தில் சிக்கியுள்ள சக மக்களை மீட்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு சல்யூட்!
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை பொதுமக்கள் மீட்டு வருகிறார்கள்.
சென்னையில் நேற்று 12 மணிநேரத்தில் 272 மிமீ மழை பெய்துள்ளது. வரலாறு காணாத மழையால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் மக்களும் சக மக்களை காப்பாற்றி வருகிறார்கள்.
|
பைக்
சென்னை மக்கள் அருமையானவர்கள். வெள்ளத்தில் மூழ்கவிருந்த நபரை காப்பாற்றியுள்ளனர் என சக்கரவர்த்தி ட்வீட் செய்துள்ளார்.
|
ஊரப்பாக்கம்
கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கத்தில் சுமார் 30 பேரை ராணுவத்திநர் மீட்டுள்ளனர். தயவு செய்து அங்கு சென்று மக்களுக்கு உதவவும் என ராஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
|
அண்ணாநகர்
#PrayForCHennai அண்ணாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சிறுவர்களை மீட்ட மக்கள்.
|
பேருந்து
இந்த நிலையிலும் பேருந்துகளை இயக்கி எங்களுக்கு உதவும் எம்டிசி டிரைவர்களை நினைத்து பெருமையாக உள்ளது.












Click it and Unblock the Notifications