சென்னை மழையையும், மற்ற ஊர் மழையையும் கம்பேர் பண்ண இந்த ஒரு போட்டோ போதும்!
குஷி படத்தில் ஜோதிகா மழை பற்றி ஆடும் ஒரு பாடலையும், படகோட்டி படத்தில் எம்ஜிஆர் மீனவர்கள் நிலை பற்றி பாடும் சோக பாடலையும் சென்னைக்கும் பிற ஊருக்குமாக இணைத்துவிட்டனர் நெட்டிசன்கள்.
Recommended Video
சென்னை: ஊர்ல, ஒலகத்துல எங்க மழை வந்தாலும் சும்மா இருக்காங்க, இந்த சென்னையில் மழை வந்தால் மட்டும் ஏன் இந்த அலப்பறை என்ற எண்ணம் உங்களுக்கு வருகிறதா?
நிலவியல், பெருகிவிட்ட கான்க்ரீட் கட்டுமானங்கள் என பல காரணங்கள் சென்னை வெள்ளத்திற்கு காரணமாகிவிட்டது, இந்த அமளி, துமளிகளுக்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் பிற மாவட்டங்கள் அதிலும், குறிப்பாக உட்புற மாவட்டங்களில் பரவலாக மழை இல்லை. அங்குள்ள விவசாயிகள் மழைக்காக ஏங்கியபடி உள்ளனர். இந்த நிலையில், ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
அந்த படம் இதுதான். குஷி படத்தில் ஜோதிகா மழை பற்றி ஆடும் ஒரு பாடலையும், படகோட்டி படத்தில் எம்ஜிஆர் மீனவர்கள் நிலை பற்றி பாடும் சோக பாடலையும் சென்னைக்கும் பிற ஊருக்குமாக இணைத்துவிட்டனர் நெட்டிசன்கள்.
இந்த ஒரு போட்டோ போதும், இப்போதுள்ள நிலைமையை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்ல.