17 பேரையும் தூக்கிலிடுங்கள்... சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்
17 பேரையும் தூக்கிலிட்டு கொல்லுங்கள் என சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
சென்னை: சென்னை அயனாவரத்தில் காது கேளாத வாய் பேச இயலாத சிறுமியை சீரழித்த 17 பேரையும் தூக்கிட்டு கொல்லுங்கள் என்று சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர் தனது தாய் தந்தை, சகோதரியுடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கு சென்றுவிட்டு லிப்டில் வரும் போது லிப்ட் ஆபரேட்டர் ரவி (66) என்பவன் சிறுமியை பலாத்காரம் செய்தான்.

இதையடுத்து மற்றவர்களையும் அழைத்து சிறுமியை நாசம் செய்துள்ளான். இதுபோல் சிறுமியை 7 மாதங்களாக 17 பேர் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக புகாரின் பேரில் 17 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சென்னை சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications