மதனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு!
வேந்தர் மூவிஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை: பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து பிடிபட்ட வேந்தர் மூவிஸ் மதனை 10 நாள் போலீஸ் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக 113 மாணவர்களிடம் ரூ80 கோடி மோசடி செய்தார் மதன் என்பது குற்றச்சாட்டு. ஆனால் இந்த பணத்தை தாம் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறி தற்கொலை செய்யப் போவதாக எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் மதன்.

ஆனால் கடந்த 6 மாதங்களு9க்கும் மேலாக உல்லாசமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் மதன். திருப்பூரில் பெண் ஒருவர் வீட்டின் ரகசிய அறையில் பதுங்கியிருந்த போது மதன் போலீசில் பிடிபட்டார்.
திருப்பூரில் கைது செய்யப்பட்ட மதன் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டிசம்பர் 5-ந் தேதி வரை மதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டது.
இதனிடையே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை 10 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மே மாதம் முதல் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த போது சிக்கினார். இதனிடையே மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications