மதனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு!
வேந்தர் மூவிஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை: பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து பிடிபட்ட வேந்தர் மூவிஸ் மதனை 10 நாள் போலீஸ் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக 113 மாணவர்களிடம் ரூ80 கோடி மோசடி செய்தார் மதன் என்பது குற்றச்சாட்டு. ஆனால் இந்த பணத்தை தாம் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறி தற்கொலை செய்யப் போவதாக எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் மதன்.

ஆனால் கடந்த 6 மாதங்களு9க்கும் மேலாக உல்லாசமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் மதன். திருப்பூரில் பெண் ஒருவர் வீட்டின் ரகசிய அறையில் பதுங்கியிருந்த போது மதன் போலீசில் பிடிபட்டார்.
திருப்பூரில் கைது செய்யப்பட்ட மதன் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டிசம்பர் 5-ந் தேதி வரை மதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டது.
இதனிடையே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை 10 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மே மாதம் முதல் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த போது சிக்கினார். இதனிடையே மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications