சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.. புறநகர்களில் வெளுத்து வாங்கியது!
சென்னை: சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்களிலும் கன மழை பெய்து மக்கள் மனங்களை குளிர்வித்தது. பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் கடந்த சில தினங்களாகதொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இன்றும் மாலைக்கு மேல் நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது.

திருவல்லிக்கேணி, கிண்டி, அரும்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை ஆகிய நகர்ப் பகுதிகளிலும், கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. போகப் போக காற்று நின்று மழை மட்டும் பலமாக பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று இரவு சென்னை, புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மோன் கணித்துள்ளது.
அதேசமயம், கடந்த 2 நாட்களில் ஒட்டுமொத்த தமிழகத்தில் மழையின் அளவு குறைந்துள்ளதாகவும் வெதர்மேன் கூறியுள்ளது












Click it and Unblock the Notifications