இடியுடன் கூடிய மழை.... குளிர்ந்த சென்னை…. மகிழ்ந்த மக்கள்
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாலைவரை மழை நீடித்த காரணத்தால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
காலை நேரத்திலும் சாரல்மழை பெய்துவருவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் மழையில் நனைந்தவாறே பள்ளிக்குப் புறப்பட்டு சென்றனர்.

அனலை குறைத்த மழை
அக்னி நட்சத்திரம் முடிந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் நள்ளிரவு 1 மணி அளவில், பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.

பெருகிய வெள்ளம்
கோயம்பேடு, வடபழனி, கிண்டி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் பெய்த கன மழையால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாரல்மழை
அதிகாலை நேரத்தில் சாரல் மழையாக மாறியது. காலை 9 மணிவரையிலும் மழை நிற்காமல் பெய்த காரணத்தால் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோரும் அலுவலகம் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

குளிர்ந்த சென்னை
சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நின்ற காரணத்தால் வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். ஆனாலும் நேற்றுவரை வாட்டி வதைத்த அனல் காற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை தொடரும்
வெப்பச் சலனத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications