2011-ஐ விட ரொம்ப மோசமாக ஓட்டுப் போட்ட சென்னை மக்கள்!
சென்னை: சென்னை வாக்காளர்களைப் பார்த்து ஊரே கிண்டலடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. காரணம் மிக மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தேர்தலை அவர்கள் அலட்சியப்படுத்தியது. கடந்த 2011 தேர்தலை விட இந்த முறை சென்னை மாவட்டத்தில் வாக்குப் பதிவு குறைவாக நடந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு முதல்வர் ஜெயலலிதாவும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர்.
கடந்த ஆண்டு இறுதியில் வந்த மாபெரும் வெள்ளத்தில் சிக்கி சென்னையே மூழ்கிப் போனது. இதை வைத்து ஏகப்பட்ட அரசியல் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் இந்த தேர்தலில் சென்னையில்தான் வாக்குப் பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னைதான் குறைந்த அளவிலான வாக்குப் பதிவை கண்டு அனைவரையும் அதிர வைத்துள்ளது.

2011 தேர்தலிலும் இதே கதைதான்
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக அளவிலான வாக்குப் பதிவை கண்ட மாவட்டம் கரூர். அங்கு 86 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்த அளவிலான வாக்குப் பதிவை கண்ட மாவட்டம் சென்னைதான்.

இதுக்கு அது பரவாயில்லை
கடந்த தேர்தலில் சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 68.02 சதவீதமாகும். ஆனால் இந்த முறை அதை விட குறைந்து போயுள்ளது கவலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

வெறும் 60.47 மட்டுமே
இந்த முறை வெறும் 60.47 சதவீத வாக்காளர்கள்தான் ஓட்டுப் போட்டுள்ளனர். இத்தனைக்கும் சென்னையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தாறுமாறாக விளம்பரம் செய்தது தேர்தல் ஆணையம். ஆனால் படிச்சவன் பாட்டைக் கெடுப்பான் கதையாக மெத்தப் படித்த மேதாவிகள் நிறைந்த சென்னை அனைவரையும் ஏமாற்றி விட்டது.

அதிகம் ஆர்.கே.நகர் - குறைவு மயிலாப்பூர்
சென்னையில் உள்ள தொகுதிகளிலேயே அதிக அளவாக ஆர்.கே.நகரில்தான் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவிலான வாக்குப் பதிவு மயிலாப்பூரில் 55.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. துறைமுகத்தில் 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications