சென்னை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: அசாமில் வெடிக்க வேண்டிய டைம் பாம், தவறுதலாக சென்னையில் வெடித்துவிட்டதாக ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து, அசாம் தலைநகர் குவஹாத்திக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்தபோது, அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் 2014ம் ஆண்டு மே 1ம் தேதி நடைபெற்றது. இதனிடையே சிமி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஜாகிர், ஷேக் மெகபூப் மற்றும் அம்ஜத் கான் ஆகிய 3 தீவிரவாதிகளை மத்திய பிரதேச போலீசார் ஒடிசாவில் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்களுக்கு சென்னை குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சிறப்பு புலனாய்வு குழு அம்மூவரிடமும் விசாரணை நடத்தியது.
விசாரணையில், வங்கதேசத்தில் இருந்து அசாமிற்குள் அகதிகளாக நுழையும் முஸ்லிம்கள் மீது அசாம் பழங்குடியினர் தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதற்கு பழிவாங்க குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதேநேரம், அசாமிற்குள் ரயில் சென்றடைந்தபிறகு குண்டு வெடிக்க டைமரை செட் செய்திருந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறால் அது சென்னையிலேயே வெடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளை சென்னை கொண்டுவந்து விசாரிக்க வசதியாக மத்திய பிரதேச கோர்ட்டில் பாடி வாரண்ட் வாங்குவதற்கு தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications