தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி... சென்னையில் சோகம்!
சென்னை: குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை ஒன்று பலியான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில், பள்ளிக்கரணையில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாத இரண்டரை வயது வகீஸ் என்ற குழந்தை, வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது, தெரியாமல் அந்நீரில் காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அப்போதே புகார் அளிக்கப் பட்டதாகவும், அரசு மழையால் சேதமடைந்த சாலைகளை சீர் செய்வதில் மந்தம் காட்டுவதால் தற்போது குழந்தை ஒன்றும் பலியாகி உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்












Click it and Unblock the Notifications