For Daily Alerts
Just In
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி... சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம் !
சென்னை: தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'தமிழகத்தில் பல கிராமங்களில் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆனால், சாராயம் தாராளமாக கிடைக்கிறது. கேரளாவைப் போல, தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,' என்றார்.
Comments
English summary
The MDMK general secretary Vaiko has staged a protest in Chennai today, demanding to ban liquor in the state