சென்னையில் மாலை அல்லது இரவில் கனமழை பெய்யலாம்.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.

குறிப்பாக வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் உக்கிரம் உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகம்

வெயிலின் தாக்கம் அதிகம்

சென்னையில் அவ்வப்போது மேக மூட்டம் இருந்தாலும் புழுக்கம் கொஞ்சமும் குறையவில்லை. இதேபோல் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் மேற்கு வங்க கடலில் உருவாகிய மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும்

கனமழை பெய்யும்

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்புவனத்தில் 8 செ.மீ., கரூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இரவில் கனமழை

இரவில் கனமழை

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+