For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதல் விவகாரம்.. செல்போன் டவரில் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்..சென்னை அருகே பரபரப்பு

சென்னை திருவேற்காட்டில் இளம்பெண் ஒருவர் உயர் மின் அழுத்தக் கோபுரத்தில் தற்கொலைக்கு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திருவேற்காட்டில் காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவேற்காடு தம்புசாமி நகரைச் சேர்ந்தவர் பிரியா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் இவர் அதே பகுதியை சேர்ந்த சபரி என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 In chennai a woman tried to commit suicide

இதையடுத்து சபரிக்கு வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் சபரிக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து பிரியா காதலன் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபரி மீது பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று திடீரென பிரியா வீட்டின் அருகே உள்ள செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தன்னை ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த காவல் துறையினர், சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பெண்ணை கீழே இறக்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
In chennai a woman tried to commit suicide by Love affair
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X