4 பெண்கள் கொலை வழக்கு... ‘கொலையாளியைத் தூக்கில் போடுங்கள்’... பாண்டியம்மாளின் தந்தை ஆவேசம்
சென்னை: தனது மகள் மற்றும் மூன்று பேத்திகளைக் கொலை செய்த சின்னராஜைத் தூக்கில் போட வேண்டும் என கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையில் இரண்டாவது கணவரால் பாண்டியம்மாள் என்ற பெண்ணும், அவரது மூன்று மகள்களும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். பூட்டிய வீட்டில் இருந்து அழுகிய நிலையில் அவர்களது உடல் மீட்கப்பட்டது. பின்னர் சென்னை ராயப்பேட்டையில் அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா ஆகியோருடைய உடல்களை பெற்றுக்கொள்வதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோட்டையிருப்பு கிராமத்தில் இருந்து பாண்டியம்மாளின் தந்தை சின்னையா (65) சென்னை வந்திருந்தார்.
பிரேத பரிசோதனைக்குப் பின் 4 பேரின் உடல்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை சொந்த ஊர் கொண்டு செல்ல விரும்பாத சின்னையா, போலீசார் உதவியுடன் சென்னை ஐஸ் ஹவுசில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்தார்.
அப்போது அவர், ‘தனது மகள் மற்றும் மூன்று பேத்திகளின் வாழ்வைச் சிதைத்த சின்னராஜூவைத் தூக்கில் போட வேண்டும்' என கண்ணீருடன் கூறினார்.
மேலும், பாண்டியம்மாளின் முதல் கணவர் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதாகவும், இதனால் மனமுடைந்த பாண்டியம்மாள் பேத்திகளை அழைத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டதாகவும், சமீபத்தில் தான் அவர்கள் சென்னையில் சின்னராஜுவுடன் இருப்பது தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மகளின் இருப்பிடம் தெரிந்ததைத் தொடர்ந்து அவர்களை கடந்த 19ம் தேதி சின்னையா தனது ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பாண்டியம்மாள் மகிழ்ச்சியுடன் இருந்ததால், மகள் சந்தோசமாக வாழட்டும் என அவர் கருதியுள்ளார்.
ஆனால், ஒரே வாரத்தில் இப்படி அவர்களது வாழ்க்கை முடிந்து போகும் என எதிர்பார்க்கவில்லை என அவர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications