"40 வயது இளைஞர்" தமிழக காங்கிரஸ் தலைவராகும் காலம் வர வேண்டும்: ப. சிதம்பரம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு 40 வயது இளைஞர் தலைவராகும் காலம் வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் 3-ஆவது இடத்தில் உள்ளது. அதிமுக, திமுக இரண்டும் மிகப்பெரிய மாநிலக் கட்சிகள். தேசிய நலன் பற்றி கவலைப்படாத மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் தமிழகத்தில் தேசியக் கட்சியை நடத்துவது கத்தி மீது நடப்பது போன்றது.
தேசியக் கட்சி என்பது சில நேரங்களில் பலம். பல நேரங்களில் பலவீனம். ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர வேண்டுமானால் பேச்சு, எழுத்து, பிரசாரம், போராட்டம் என்ற நான்கு ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆயுதங்கள் இல்லாமல் நாம் நிராயுதபாணியாக இருந்தோம். இனி இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய தலைவர் இளங்கோவன் சிந்திக்க வேண்டும். பேச வேண்டும். எழுத வேண்டும். எழுத வாய்ப்பு கிடைக்காவிட்டால் நமக்கென்று ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் குறைந்தது 117 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற வேண்டுமானால் 117 தொகுதிகளில் காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும். கிராம அளவில் காங்கிரஸ் கமிட்டிகள் இருக்க வேண்டும்.
கட்சி அமைப்புகள் இல்லாமல் ஆட்சியைப் பிடிப்போம் என்று கனவு காண்பது சரியானது அல்ல. நேரு 29 வயதில் அலகாபாத் நகர மேயரானார். 40- ஆவது வயதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார்.
29 வயதில் நேருவால் மேயர் ஆக முடியும் என்றால் அந்த வயதுள்ள இளைஞர்களால் இப்போது கட்சிப் பொறுப்பை ஏற்க முடியாதா? மாவட்ட, வட்டார, கிராம காங்கிரஸ் கமிட்டிகளுக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பது குறித்து புதிய தலைவர் சிந்திக்க வேண்டும்.
40 வயது இளைஞர் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்கும் காலம் வர வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியும்.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications