'இந்திய நிர்வாக காஷ்மீர்' என்கிற யுஎஸ் அறிக்கையை மத்திய அரசு எப்படி ஏற்கலாம்? ப.சிதம்பரம் கேள்வி
இந்திய நிர்வாக காஷ்மீர் என குறிப்பிடும் அமெரிக்காவின் அறிக்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: இந்திய நிர்வாக காஷ்மீர் என குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் அறிக்கையை மத்திய அரசு எப்படி ஏற்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருந்தோர். இந்த நிலையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் சலாவுதீனை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனம் செய்தது.

இது இந்தியாவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பெருமிதத்துடன் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனம் செய்யும் அமெரிக்காவின் அறிக்கையில், 'இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறப்படும் நிலையில் இந்தியா நிர்வகிக்கும் பகுதி என அமெரிக்கா குறிபிட்டுள்ளதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
US' official statement used the phrase 'Indian-administered Jammu and Kashmir'. How did India accept this?
— P. Chidambaram (@PChidambaram_IN) June 28, 2017
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமெரிக்காவின் இந்த அறிக்கையை எப்படி மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் மத்திய அரசு ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications