For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிமுத்தாறு அணையில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடியார் உத்தரவு!

மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பிசான பருவ சாகுபடிக்காக நெல்லை மணிமுத்தாறு அணையில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் 2018 மார்ச் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chief minister Edappadi palanisami order to release water in Manimutharu dam

330.05 மில்லியன் கனஅடிக்கு மிகாமர் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 2757 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து நீர் திறக்க முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி வேளாண்மையை பெருக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

English summary
Chief minister Edappadi palanisami order to release water in Manimutharu dam. He also ordered to release water in Uthangarai pamparu dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X