காவல்துறையில் உள்ள ஆர்டர்லி முறை ரத்து.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
காவல்துறையில் ஆர்டர்லி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவல்துறையில் ஆர்டர்லி முறை நடைமுறையில் இல்லை எனவும் ஆர்டர்லி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கள் கிழமை திமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் செயின் பறிப்பு மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டதாகவும் காவல்துறையில் ஆர்டர்லி முறை குறித்து சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

துரைமுருகனின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துப் பேசுகையில், திமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் குற்றங்களைத் தடுக்க முடியாது. குற்றங்கள் பெருகாமல் குறைக்க மட்டுமே முடியும் என்று பேசினார்.
ஆர்டர்லி முறை குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது காவல்துறையில் ஆர்டர்லி முறை நடைமுறையில் இல்லை. ஆர்டர்லி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் வீட்டில் காவலர்கள் பணியமர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. காவல் துறை உயர் அதிகார்களின் இருப்பிடங்களில் இருப்பிட உதவியாளர்கள் 86 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications