கிருஷ்ணா நதி நீர் வேண்டி ஆந்திராவுக்குப் படையெடுக்கும் முதல்வர் ஓபிஎஸ்!
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார். அம்மாநில தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச நாளை ஆந்திரா செல்ல இருக்கிறார். அம்மாநில தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் அவர் பிற்பகல் 1 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் மூலம் ஓரளவிற்கு குடிநீர் பிரச்சினை தீர்க்க முடியும். இந்த ஆண்டிற்கான தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடக்கோரி கடந்த வாரம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதினார். இதனையடுத்து கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதிநீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை ஆந்திரா செல்கிறார். அம்மாநில தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்து பேச உள்ளார். தமிழக முதல்வர் ஒருவர் நதிநீர் பிரச்சனைக்காக ஆந்திரா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications