திருச்சி அருகே 13 வயது சிறுமிக்கு திருமணம்... பெற்றோருக்கு போலீஸ் 'காப்பு'
திருச்சி: தொட்டியம் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரையும் , சிறுமியின் பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சுள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும் நாமக்கல் மாவட்டம், சந்தைமேட்டைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடந்தது.

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆய்வாளர் ஜெயந்தி, சிறுமியைத் திருமணம் செய்த செல்வராஜ், சிறுமியின் பெற்றோர் மாதேஸ்வரன், ஜானகி ஆகியோரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு செல்வராஜ், மாதேஸ்வரன் இருவரையும் நாமக்கல் கிளைச்சிறையிலும், ஜானகியை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.
மேலும், தலைமறைவான செல்வராஜின் பெற்றோர் செல்லப்பன், சின்னம்மாள் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications