மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர் சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட தி.மலை குழந்தைகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவமனையிலேயே வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, பேய் கோபுரம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ். இவரது மனைவி லோகேஸ்வரி. இவர்கள் இருவரும் சென்னையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வினி என்ற மகளும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.

இந்த குழந்தைகளை, சென்னையில் வைத்து பராமரிக்க முடியாததால் லோகேஸ்வரி குடியாத்தத்தை அடுத்த கொத்தமாரிகுப்பம் கிராமத்தில் உள்ள தனது தங்கை முத்துலட்சுமியிடம் குழந்தைகளை வளர்க்குமாறு கொடுத்தார்.
இந்நிலையில் குழந்தைகளை முத்துலட்சுமி கொடுமை செய்வதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் தனது மனைவி லோகேஸ்வரியுடன் குடியாத்தம் வந்து பார்த்தபோது தன் குழந்தைகள் அடையாளம் தெரியாதபடி உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முத்துலட்சுமியிடம் விசாரித்தபோது, அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.
பின்னர், குழந்தைகளை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு 9 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று இருவரும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குழந்தைகளின் உடல்நிலை குறித்து அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி டீன், "சிறுமி அஸ்வினிக்கு கண்கள் பாதிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டதோடு, எதிர்காலத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் அவரது இடது கைவிரலின் எலும்பு முறிந்திருந்தது. அவையும் தற்போது இணைந்து குணமடைந்துவிட்டது.
அதேபோல் அஸ்வின் காலில் வெந்நீர் ஊற்றப்பட்டு இருந்த காயங்கள் குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெற்றோருக்கு இந்த மருத்துவமனையிலேயே முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கல்விக்கு ஏற்ற வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் குழந்தைகளின் படிப்புக்கு இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து நன்கொடை வசூல் செய்து நிதியுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications