அரசியலைப் பற்றி வருங்கால தலைமுறை என்ன நினைக்கும்... ஒன்இந்தியா வாசகர்களுக்கு சோ சொன்ன பதில் என்ன?

ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்கு முன்பு வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் மறைந்த சோ ராமசாமி. அதுகுறித்த பிளாஷ்பேக்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர், சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த எதார்த்தவாதி என்ற வார்த்தைதான் சோவுக்கு மிக மிகப் பொருத்தமாக இருக்க முடியும்.

எந்தத் துறையாக இருந்தாலும், அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் டக்கென தனது ஸ்டைலில் நக்கல், நையாண்டி மிளிர சோ அளிக்கும் பதிலே தனிதான்.

Cho and Oneindia Tamil

முன்பு ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தார் சோ. வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் அனைத்தும் முத்துக்கள்...

அதிலிருந்து சில...

கே: இன்றுள்ள இந்திய அரசியலைப் பற்றி, வருங்கால அல்லது அடுத்ததலைமுறையினர் என்ன நினைப்பார்கள்...?

ப: கவலை வேண்டாம். ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டார்கள். சொல்லப் போனால் வருங்காலத் தலைமுறையினர் எதைப் பற்றியும் ஒன்றுமே நினைக்க மாட்டார்கள்.அந்த அளவுக்கு அவர்களை இப்போதே மழுங்க அடித்துக் கொண்டு வருகிறோம்.

கே: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்?

ப: தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க.வினர் மீதான வழக்குகள் தொடரும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.வினர் மீதான வழக்குகள்ஆரம்பிக்கும்.

கே: பெண் என்பவள் எப்படித்தான் இருக்க வேண்டும்? அதையாவது கூறுங்களேன்...?

ப: இருக்க வேண்டும் - என்று நீங்கள் தீர்மானித்து விட்ட பிறகு, உங்களோடு பேசி பிரயோஜனமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+