மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அப்பல்லோவில் அனுமதி
சென்னை: மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ எஸ் ராமசாமி உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரை நூற்றாண்டு காலமாக அரசியல், பத்திரிகை, சினிமா, எழுத்துத் துறைகளில் இயங்கி வருபவர் சோ ராமசாமி. தமிழக அரசியலில் பல திருப்பங்களுக்குக் காரணமாக இருந்தவர்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன்பு கூட அவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.
இந்த நிலையில், இன்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications