பத்திரிகையாளர் 'சோ' ராமசாமி நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தகவல்
சென்னை: மூத்த பத்திரிகையாளரும், 'துக்ளக்' இதழின் ஆசிரியருமான 'சோ' ராமசாமியின் உடல் நலம் தேறிவருவதாக அவரது குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சோ காலமானதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துக்ளக் இதழின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமி, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ ராமசாமி கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி கூட சோ-வை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். முதல்வர் ஜெயலலிதாவும் சோவிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே 'சோ' ராமசாமி காலமானதாக குஷ்பு உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டனர். இதனையடுத்து பலரும் கண்டனம் தெரிவிக்கவே குஷ்பு மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் 'துக்ளக்' ஆசிரியருமான 'சோ' ராமசாமியின் உடல் நலம் தேறிவருவதாக அவரது குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து
'சோ' ராமசாமி காலமானதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications