ரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி!

ரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் காத்திகேயன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு: ரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் காத்திகேயன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குமாரசாமி என்பவரால் நடத்தப்படும் கிறிஸ்டி ஃபிரிட்ஜ்கிராம் என்ற நிறுவனம் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு அதிக அளவு முட்டைகளை விநியோகித்து வருகிறது.

இந்நிலையில், போலி நிறுவனம் நடத்தி வரி ஏய்ப்பு செய்ததாக சென்னை திருவான்மியூரில் உள்ள குமாரசாமியின் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

500க்கும் மேற்பட்ட அதிகாரிகள்

500க்கும் மேற்பட்ட அதிகாரிகள்

சென்னை, பெங்களூரு, கோவை, சேலம், திருச்செங்கோட்டில் உள்ள 76 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் நாமக்கல், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

குமாரசாமியிடம் விசாரணை

குமாரசாமியிடம் விசாரணை

இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் குமாரசாமியை நேற்று கைது செய்தனர். சென்னையில் வைத்து குமாரசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இந்நிலையில் திருச்செங்கோடு ஆண்டிப்பாளையம் கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் கார்த்திகேயன் ரெய்டுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காலில் எலும்பு முறிவு

காலில் எலும்பு முறிவு

விசாரணையின் போது மாடியிலிருந்து கீழே குதித்தார் காசாளர் கார்த்திகேயன். இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+