For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடர்ந்து போக்கு காட்டும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்.. பிடிபடாததால் தனிப்படை போலீஸ் ஏமாற்றம்!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் பிடிபடாததால் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் பிடிபடாததால் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியுள்ளனர்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Cinema financier Anbuchezhiyan is still absconding

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அன்புச்செழியனை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் தேடுல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அன்புச்செழியன் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எங்கு தேடியும் அன்புச்செழியன் கிடைக்காததால் ஹைதராபாத், பெங்களுரூ சென்ற தனிப்படை போலீஸ் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியுள்ளனர்.

English summary
Cinema financier Anbuchezhiyan is still absconding. Police in Hyderabad and Bangalore have returned to Chennai with disappointment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X