வடிவேல் படத்துல வருமே ஒரு காமடி.. ஆமா அதே படம்தான்.. அதே பாணியில்.. சூலூரில் ஏமாந்த இளைஞர்!
சூலூர்: சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் அரிசி கடையில் நூதன முறையில் கடை உரிமையாளரை ஏமாற்றி அரிசி மூட்டையை ஒருவர் திருடிச் சென்றார். இந்த சம்பவம் வடிவேல் காமெடியை நினைவுப்படுத்துகிறது.
Recommended Video
சூலூரில் வசிப்பவர் ராயப்பன் மகன் செந்தில்குமார்(47). இவர் சூலூர் அருகே ரங்கநாதபுரம் பகுதியில் சொந்தமாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தினமும் அருகிலுள்ள பவுண்டரிக்கு வேலைக்குச் செல்வதால் இவரது மனைவி லலிதா (40), மகன் அசோக் குமார் ஆகியோர் அரிசி கடையை பகல் நேரங்களில் கவனித்து வருகின்றனர்.

தொகை
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் தனக்கு அரிசி தேவை என கூறி செந்தில் குமாரை அழைத்துக் கொண்டு கடை அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வந்தவுடன் தனக்கு 5 மூட்டை அரிசி தேவை எனவும் அரிசி மூட்டையை தனது வீட்டுக்கு கொண்டுவந்து தருமாறும் அங்கு வந்து அதற்கான தொகையை பெற்று செல்லுமாறு கேட்டுள்ளார்.

வேகம்
இதை நம்பிய செந்தில்குமார் அரிசி தேவை என வந்த மர்ம நபரின் வண்டியில் இரண்டு மூட்டை அரிசி ஏற்றி விட்டு விட்டு மேலும் மூன்று மூட்டையை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு மர்ம நபரை பின்தொடர தயாராகியுள்ளார். அப்போது இரண்டு மூட்டை ஏற்றிய நிலையில் மர்மநபர் தனது பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சினிமா பட பாணி
அவரைத் துரத்திச் சென்ற செந்தில்குமார் அவர் எங்கேயும் காணாததால் திகைத்து நின்றார். இதற்கு அடுத்ததாக தான் ஏமாற்றப்பட்டது செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது. சினிமா பட பாணியில் அரிசி கடையில் நூதனமான வகையில் திருடி உள்ளது அப்பகுதியில் உள்ளவர்களை வியக்க வைத்துள்ளது.

சாம்பிள்
வடிவேல் கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் இப்படிதான் கடையில் சாம்பிள் கேட்பார். அந்த கடைக்காரர் திரும்புவதற்குள் பைகளில் அரிசியை திருடி திருடி தனது சகாக்களிடம் கொடுத்துவிடுவார். இப்படியே சாம்பிள் கேட்டு கேட்டு அரிசியை திருடுவார். இதுபற்றி சூலூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார் காவல்துறையினர் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications