ஆர்.கே.நகரில் ஓபிஎஸ், தினகரன் தரப்பினர் இடையே மோதல்.. போலீஸ் குவிப்பு.. பதட்டம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மதுசூதனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். அப்போது தினகரன் தரப்பினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் காயமடைந்தனர். இருவர் மண்டை உடைந்தது. தாக்குதலுக்குள்ளான ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த ஒருவர் வாய்பேச முடியாத மாற்றுதிறத்திறனாளி. இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications