71-வது சுதந்திர தினம்: கோட்டையில் முதல்முறையாக தேசிய கொடியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றினார்.
நாட்டின் 71-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் சுதந்திர தின கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடியார் பார்வையிட்ட அணிவகுப்பில் ஆந்திரா காவல்துறையினர் முதல் முறையாக பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications