லீவு நாளிலும் தீயாய் வேலை பார்க்கும் ஓ.பன்னீர் செல்வம்... சுறுசுறு ஆலோசனை
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று விடுமுறை நாளிலும் கூட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மும்முரமாக ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுமுறை தினமான இன்றும் கூட தலைமைச் செயலகம் வந்து தனது பணிகளைப் பார்த்ததால் தலைமைச் செயலக ஊழியர்கள் வியப்படைந்தனர்.
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் இன்று பல்வேறு கட்ட ஆலோசனைகளையும் நடத்தினார். மக்கள் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறும் அவர் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டாராம்.

வர்தா புயல் நிவாரணப் பணிகள்தான் தற்போது தமிழக அரசின் முக்கிய பணியாக உள்ளது. இன்னும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் முழு அளவில் இயல்பு நிலை திரும்பவில்லை. தொலைபேசி இணைப்புகள் இன்னும் கூட முழுமையாக சரியாகவில்லை. பல இடங்களில் மரங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.
பல பகுதிகளில் இன்னும் கூட குப்பைகள், மரக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் பல இடங்களில் தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் உள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகள் இன்னும் கூட சரியாகாத நிலை உள்ளது.
இந்த நிலையில் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டியிருந்தார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுப்பணி நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநான் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு பணிகள் குறித்து முதல்வர் பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவை:
முதல்வர் திறக்க வேண்டிய கட்டடங்கள், துவக்க வேண்டிய திட்டங்கள் குறித்த விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்.
கட்டடங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த முழு தகவல்கள் மற்றும் அதன் புகைப்படமும் அனுப்ப வேண்டும்.
காணொலி காட்சி மூலம் துவக்கப்படும் திட்டமாக இருந்தால் அது பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
புதிதாக கட்டப்பட வேண்டிய பாலங்கள், திட்டங்கள் குறித்த அறிக்கைகளையும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவிகள் பற்றிய விவரங்களையும் விரிவாக அனுப்ப வேண்டும்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications