என் மகளை முதல்வர் விடுவிப்பார் - நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் நம்பிக்கை
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியை முதல்வர் விடுதலை செய்வார் என நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் கூறினார்.
சென்னை: சிறையில் இருந்து எனது மகளை முதல்வர் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யயப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நளினியும் ஒருவர். அந்த கொலையின் பின்னணி பற்றியும், வழக்கு விசாரணை குறித்தும், வேலூர் சிறையில் நடைபெற்ற நளினி-பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்தும்பரபரப்பான தகவல்கள் அடங்கிய நளினியின் சுயசரிதை புத்தகம் "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்" என்ற தலைப்பில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்துள்ள இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வடபழனியில் நடந்தது. புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, அதன் முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
இந்த வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓவியர் வீரசந்தானம், தியாகு, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள், கடந்த 26 ஆண்டுகளாக எனது மகள் நளினி சிறையில் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார். என் மகள் நளினியை முதல்வர் விடுவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications