ஆளுநராக பொறுப்பேற்க தமிழகம் வந்தார் வித்யாசாகர் ராவ்- முதல்வர் ஜெ., வரவேற்பு
சென்னை: தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்க சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு அளித்துள்ளார்.
தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. புதிதாக ஆளுநர் எவரும் நியமிக்கப்படாத நிலையில் மகாராஷ்டிர மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வித்யாசாகர் ராவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஆளுநராக பதவியேற்பதற்காக வித்யாசாகர் ராவ் சற்று முன் சென்னை வந்துள்ளார். அரசு முறைப்படி அவருக்கு சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு அளித்தார். அவருடன் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், டிஜிபி அசோக்குமார் ஆகியோர் உடனிருந்து வரவேற்பு அளித்தனர்.
வித்யாசாகர் வருகையினால் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையம் முதல் ராஜ்பவன் வரை பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக ஒருபுறம் நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications