மேலூர் விவசாயிகள் போராட்டம் எதிரொலி- பெரியாறு கால்வாயில் வைகை நீரை திறக்க முதல்வர் உத்தரவு
மேலூர் விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாயில் நீரை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலூர்: மேலூர் விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
வைகை அணையில் பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் மேலூர் வரையில் விவசாயிகளுக்கு ஒருபோக பாசனத்துக்கு நீர் கிடைக்கும். ஆனால் பெரியாறு பிரதான கால்வாயில் நீரை திறந்துவிடாமல் வழக்கத்துக்கு மாற்றாக பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களுக்கு வைகை அணை நீர் திறக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த மேலூர் சுற்றுவட்டார விவசாயிகள் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதல் சுமார் 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தண்ணீர் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.
மேலும் சாமியானா பந்தல் அமைத்து விவசாயிகள் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் மதுரை- திருச்சி சாலையில் போக்குவரத்து முடங்கியது. சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்க தொடங்கின.
திருச்சியிலிருந்து மதுரை செல்ல கொட்டாம்பட்டி, நத்தம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

நாளை முதல் 27-ஆம் தேதி வரை திருமங்கலம் பிரதான கால்வாய் வாயிலாக 200 கனஅடி நீரும் பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கனஅடி நீரும் திறக்கப்படவுள்ளது. இதையடுத்து மேலூர் விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications