பேக்கரி விபத்து: தீயணைப்பு வீரர் ஏகராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- எடப்பாடியார் அறிவிப்பு
சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் இறந்த தீயணைப்புவீரர் ஏகராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: கொடுங்கையூர் பேக்கரி கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், தீயை அணைக்க முயன்று இறந்த தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதல்வர் நிவாரண உதவியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார். 47 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். அவருடன் வந்திருந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் எம்.எல்.ஏ., வெற்றிவேல் ஆகியோரும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
'காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும்' என முதல்வர் பழனிச்சாமி மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்றும் மருத்துவர்களிடம் கேட்டு, உயரிய சிகிச்சையளிக்க வலியுறுத்தினார்.
பின்னர் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " கடை ஷட்டரை திறந்த போது சிலிண்டர்கள் வெடித்தன. இதனால் தான் அங்கிருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்களுக்கு போதுமான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல். இந்த விபத்தில் உயிரிழந்த ஏகராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். காயம் அடைந்த அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் " என்றார்.
தீவிபத்தில் காயமடைந்த 29 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 12 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சென்னை கொடுங்கையூர் தீவிபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். 'அவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக' ராதாகிருஷ்ணன் பேட்டியில் கூறியிருந்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications