பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க மு.க.ஸ்டாலின்தான் காரணமாம்!
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் முறைதவறி நடந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நேர்ந்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கும்பகோணம்: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் முறைத்தவறி நடந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வழிகோலியது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
முதல்வராக பதவியேற்க இருந்தவேளையில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சசிகலாவால் அவரது ஆதரவாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி சட்டசபை அதிமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். ஆட்சி பொறுப்பேற்ற 15 நாள்களுக்குள் சட்டசபையில பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்தார்.

ரகசிய வாக்கெடுப்பு...
பதவியேற்ற 3 நாட்களிலேயே சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வர் பழனிச்சாமி வாசித்தார். முன்னதாக, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

சட்டசபையில் அமளி
இதைத் தொடர்ந்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்டாலின்தான் காரணம்...
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு சட்டசபையில் மு.க.ஸ்டாலின் முறையற்று நடந்து கொண்டதால்தான் என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

முறைதவறிய மு.க. ஸ்டாலின்
இதுகுறித்து கும்பகோணத்தில் அவர் கூறுகையில், நெடுவாசல் போராட்டத்தை சில அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றன. மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுகின்றன.

மத்திய அரசு செயல்படுத்தாது
விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது. சட்டசபையில் மு.க.ஸ்டாலின் முறை தவறி நடந்ததால்தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க வழி வகுத்தது. எனவே இந்த பினாமி அரசு அமைவதற்கு மு.க.ஸ்டாலினும் ஒரு காரணம் என்றார் அவர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications