இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு... கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் சொன்னது என்னது?
இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக கடலோர காவல்படையின் மண்டபம் கமாண்டர் ராமாராவ் அளித்த விளக்கம்.
ராமேஸ்வரம்: இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பற்றி கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி முழு விவரம்:
ராமநாதபுரத்தில் உலக மீனவர்கள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: மீனவர்கள் தங்கள் மீது சுடப்பட்ட குண்டை ஒப்படைத்திருக்கிறார்களே?
ராமாராவ்: மீனவர்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிற குண்டை நான் பார்க்கவில்லை
கேள்வி: கடலோர காவல்படையினர் .32 காலிபர் துப்பாக்கி குண்டை பயன்படுத்துகிறீர்களா?
ராமாராவ்: மீனவர்கள் காட்டியது நாங்கள் .22 காலிபர் துப்பாக்கிக் குண்டுகளை யன்படுத்துகிறோம். இது மிக மிக குறைவான காலிபர் அளவு கொண்டது. ஊசி போல சிறியதாக இருக்கும்.
கேள்வி: மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?
ராமாராவ்: நான் இதை மறுப்பதற்கில்லை. இங்கே இருந்து (மண்டபத்தில் இருந்து) சென்ற கப்பல் செல்ல அது. என்னால் அதை சரிபார்க்க முடியவில்லை.
கேள்வி: கடலோர காவல்படையினர் ரப்பர் குண்டை பயன்படுத்தாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தாரே?
ராமாராவ்: அது வந்து அமைச்சர் என்ன சொன்னார் என என்னால் சொல்ல இயலாது. கடலோர காவல்படையினர் பயிற்சியின் போது ரப்பர் குண்டுகளை பயன்படுத்துவர். அதை வைத்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கலாம்.












Click it and Unblock the Notifications