இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு... கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் சொன்னது என்னது?

இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக கடலோர காவல்படையின் மண்டபம் கமாண்டர் ராமாராவ் அளித்த விளக்கம்.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பற்றி கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி முழு விவரம்:

ராமநாதபுரத்தில் உலக மீனவர்கள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

Coast Guard commandant RamaRao speaks on Fishermen Shooting

கேள்வி: மீனவர்கள் தங்கள் மீது சுடப்பட்ட குண்டை ஒப்படைத்திருக்கிறார்களே?

ராமாராவ்: மீனவர்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிற குண்டை நான் பார்க்கவில்லை

கேள்வி: கடலோர காவல்படையினர் .32 காலிபர் துப்பாக்கி குண்டை பயன்படுத்துகிறீர்களா?

ராமாராவ்: மீனவர்கள் காட்டியது நாங்கள் .22 காலிபர் துப்பாக்கிக் குண்டுகளை யன்படுத்துகிறோம். இது மிக மிக குறைவான காலிபர் அளவு கொண்டது. ஊசி போல சிறியதாக இருக்கும்.

கேள்வி: மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?

ராமாராவ்: நான் இதை மறுப்பதற்கில்லை. இங்கே இருந்து (மண்டபத்தில் இருந்து) சென்ற கப்பல் செல்ல அது. என்னால் அதை சரிபார்க்க முடியவில்லை.

கேள்வி: கடலோர காவல்படையினர் ரப்பர் குண்டை பயன்படுத்தாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தாரே?

ராமாராவ்: அது வந்து அமைச்சர் என்ன சொன்னார் என என்னால் சொல்ல இயலாது. கடலோர காவல்படையினர் பயிற்சியின் போது ரப்பர் குண்டுகளை பயன்படுத்துவர். அதை வைத்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+