தீபாவளிக்கு முன்பு கிடைத்த "திடீர்" லீவு.. மாணவர்கள் உற்சாகம்..!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இன்று மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் செம உற்சாகமாக உள்ளனர். தீபாவளிக்கு முன்பு போய் பள்ளிக்கூடம் வைத்து விட்டார்களே என்ற கவலையில் இருந்த அவர்களுக்கு இன்று திடீரென மழை காரணமாக விடுமுறை கிடைத்ததால் தற்போது 4 நாள் விடுமுறையாக இது மாறி விட்டது.
சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த மழை சீசனில் கிடைத்துள்ள 2வது விடுமுறையாகும் இது. ஏற்கனவே ஒரு நாள் லீவு அவர்களுக்குக் கிடைத்திருந்தது.

அதேசமயம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிக் கூடங்களுக்கு நடப்பு சீசனில் இன்று தான் முதல் முறையாக விடுமுறை கிடைத்துள்ளது. மழைக்காலம் தொடங்கியது முதல் அடடா நமக்கு லீவு கிடைக்கலையே என்று இந்த மாவட்ட பள்ளிக்கூட மாணவர்கள் "ஏக்கத்தில்" இருந்து வந்த்னர். ஆனால் மழை சரியாக பெய்யாத காரணத்தால் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் நாளை தீபாவளிப் பண்டிகை வரும் நிலையில் இன்று பள்ளிகள் இயங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்கு முன்பு லீவு கிடைக்காமல் போய் விட்டதே என்ற சோகத்தில் மாணவர்கள் காணப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இன்று கன மழை காரணமாக திடீர் விடுமுறை கிடைத்தது குஷியாகி விட்டது.
இருப்பினும் இந்த விடுமுறையை வெளியில் வந்து கொண்டாட முடியவில்லை. பட்டாசு வெடிக்க முடியவில்லை. வெளியில் சுற்றவும் முடியவில்லை. மாறாக வீட்டோடு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் பெரும்பாலான பகுதிகளில் இல்லாத காரணத்தால் டிவியும் பார்க்க முடியாத நிலை.












Click it and Unblock the Notifications