தடையை மீறி சேவல் சண்டை.. திருச்சியில் பரபரப்பு
தடையை மீறி சேவல் சண்டை திருச்சியில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சேவல் சண்டையையும் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி: ஜல்லிக்கட்டு மீதாத தடையை நீக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திருச்சியில் சேவல் சண்டை நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இதனை நடத்த முடியாமல் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு ஆகியவை தடை விதித்துள்ளன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுத்துள்ளது. மேலும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, எதிர்ப்பின் இன்னொரு வடிவமாக, திருச்சியை அடுத்துள்ள உறையூரில் சேவல் சண்டை தடையை மீறி நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, சேவல் சண்டை உள்ளிட்டவை நடக்கிறதா என்பதை கண்காணிக்க, போலீசாருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பொங்கல் பண்டிகையின் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, தாராபுரம், காங்கயம், பல்லடம் மற்றும் உடுமலை பகுதிகளில், சில கிராமப் பகுதிகளில் சேவல் சண்டை நிகழ்வுகள் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை நடைபெறுகிறதா என்று கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications