மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த முயன்ற கோவை புனிதாவுக்கு 2 நாள் போலீஸ் கஸ்டடி!
மாணவிகளை தவறான பாதைக்கு ஈடுபடுத்த முயன்ற கோவை தனியார் தங்கும் விடுதி வார்டன் புனிதாவுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: மாணவிகளை தவறான பாதைக்கு ஈடுபடுத்த முயன்ற கோவை தனியார் தங்கும் விடுதி வார்டன் புனிதாவுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பாலரங்கநாதபுரம் பகுதியில் தனியார் மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியை ஜெகநாதன் என்பவர் நடத்தி வந்தார். விடுதியில் வார்டனாக புனிதா என்ற 32 வயது பெண் பணியாற்றினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உரிமையாளர் ஜெகநாதனுக்கு பிறந்தநாள் விழா ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள 4 இளம்பெண்களை புனிதா அழைத்து சென்று, ஜெகநாதனுடன் பாலியல் உறவுகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

கிணற்றில் குதித்து தற்கொலை
இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இதையறிந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீதிமன்ற காவல்
விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவானார். இந்நிலையில் கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 6 நீதிமன்றத்தில் கடந்த ஒன்றாம் தேதி புனிதா சரணடைந்தார். மாஜிஸ்திரேட் கண்ணன் வரும் 14ம் தேதி வரை புனிதாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

போலீஸ் மனுத்தாக்கல்
இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் புனிதாவை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து புனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

புனிதாவுக்கு போலீஸ் காவல்
இந்நிலையில் புனிதாவை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications