பாரா சைலிங் விபத்து.. ஜகா வாங்கும் கோவை மருத்துவ கல்லூரி.. எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்கிறது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, மருத்துவக் கல்லுாரி பொன்விழாவை முன்னிட்டு, 5ம் தேதியில் இருந்து, பாரா சைலிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மைய, கோவை கிளை தலைவர் பாபு, மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி அளித்துள்ளார்.

இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மைய, கோவை கிளை தலைவர் பாபு, மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி அளித்துள்ளார்.

நேற்று மதியம், 12:00 மணியளவில், பீளமேடு பகுதியைச் சேர்ந்த மல்லேஸ்வர ராவ் (53) பயிற்சியில் பங்கேற்றார். பாராசூட் சுமார் 60 அடி உயரத்தில் பறந்தபோது, திடீரென பெல்ட் அறுந்தது. இதில் கீழே விழுந்து அவர் இறந்தார்.

Coimbatore Medical College distanced itself from the parasailer event

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் இருந்து தங்களை தூர நிறுத்திக்கொண்டுள்ளது கோவை மருத்துவ கல்லூரி.

கோவை, அரசு மருத்துவமனை, 'டீன்' எட்வின் ஜோ அளித்த பேட்டியில் இது தெளிவாக தெரிந்தது. "மருத்துவக் கல்லுாரி மைதானத்தில், பாரா சைலிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கடந்த, 5ம் தேதி, அதிக காற்று வீசியதால், ஒரே நாளில் பயிற்சி முடிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, கொடிசியா மைதானத்தில் நடந்த பயிற்சிக்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் அனுமதி வழங்கவில்லை'' என்று அவர் கூறி கை கழுவிவிட்டார்.

எனவே இப்போது, பாபு மீதுதான் காவல்துறை பார்வை திரும்பியுள்ளது. பாரா சைலிங் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடந்த 5 வருடங்களில், தமிழகம் முழுக்க 60க்கும் மேற்பட்ட பாரா சைலிங் நடத்தியுள்ளதாகவும், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த பல நூறு மாணவர்கள் மட்டுமின்றி, சில மாவட்டங்களில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளும் இதில் பறந்து சாகசம் செய்ததாகவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+