சிறுமியை சீரழித்த முதிய மிருகங்கள் – பரபரப்பான வழக்கில் நாளை தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் சிறுமியை சீரழித்த முதியவர்கள் நான்கு பேர் மீதான பரபரப்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி, படித்து வந்தார்.

Coimbatore rap case judgment tomorrow…

தனியாக இருந்த சிறுமியை, கோபாலகிருஷ்ணன்( வயது 62,) இவரது நண்பர்கள் பாலசுந்தரம், (வயது 75), ராகம் கருப்புசாமி ( வயது46) , பாப்பம்பட்டி பிரிவு கருப்புசாமி (வயது 62), ஆகியோர், மயக்க ஊசி போட்டு, பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை, கோவை மகளிர் கோர்ட்டில்,நடந்து வந்தது. பரபரப்பான இந்த வழக்கில் மார்ச் 18 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்து இருந்தார்.

அதன்படி, நேற்று குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது, தீர்ப்பை 20 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். அதனையடுத்து இந்த பரபரப்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+