காவிரி மேலாண்மை வாரியம்: ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி முற்றுகை- பெங்களூரு நெடுஞ்சாலையில் நெரிசல்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை மாணவர்கள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Recommended Video

சென்னை : மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாணவர்களின் திடீர் முற்றுகையால் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக விவசாயிகளுக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தரக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், மாணவர்கள் என அனைவரும் தமிழக உரிமைக்காக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டனர். மத்திய அரசை கண்டிக்கும் விதமாக சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மாணவர்களின் திடீர் போராட்டத்தையடுத்து வாகனங்களும் சுங்கச்சாவடியில் தேக்கம் அடைந்தன. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications