அதிமுகவுக்காக பிரச்சார பீரங்கியான கழிவறையை சுத்தம் செய்யும் நடிகை
நடிகை வாசுகி அதிமுக வேட்பாளர்களுக்காக பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் நேற்று இரவு 9 மணிக்கு சிவகங்கை அரண்மனைவாசல் அருகே அத்தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
நடிகை வாசுகியை எதிர்பார்த்து பிரச்சாரம் நடக்கும் இடத்தில் அதிமுகவினரும், பத்திரிக்கையாளர்களும் மட்டுமே இருந்தனர். நடிகை யார் என்பது தெரியாததால் மக்கள் கூட்டம் இல்லை.
இந்நேரத்தில் வாசுகி திறந்த ஜீப்பில் அங்கு வந்தார். அப்போது அவர் பேசுகையில்,
எம்.ஜி.ஆர்.
யார் இந்த நடிகை வாசுகி என்று தானே நினைக்கிறீர்கள். நான் காரைக்குடியைச் சேர்தவள். நான் 6 மாத குழந்தையாக இருக்கையில் வள்ளுவரின் மனைவி வாசுகியின் பெயரை எனக்கு வைத்தவரே எம்.ஜி.ஆர். தான்.
வேலை கிடைச்சுடுச்சு
வேலை கிடைச்சுடுச்சு என்ற படத்தில் நான் டிப்டாப்பாக சேலை கட்டி, தலைநிறைய பூ வைத்து, கையில் குடையை பிடித்துக் கொண்டு கருப்பு நிற கண்ணாடியை அணிந்து பள்ளிக்கூடத்திற்குள் செல்வேன்.
கவுண்டமணி
நான் ஆசிரியை என்று நினைத்து கவுண்டமணி என்னை காதலிக்க முயற்சிப்பார். ஆனால் நான் பள்ளிக்கூடத்திற்குள் சென்ற உடன் உடையை மாற்றி அங்குள்ள கழிவறையை சுத்தம் செய்வேன். இப்போ என்னை அடையாளம் தெரிகிறதா?
கூட்டம்
வாசுகி தான் யார் என்று கூறி கருப்பு கண்ணாடியை அணிந்து காட்டியதும் மக்கள் கூட்டம் அவரது பேச்சைக் கேட்க கூடிவிட்டது. ஆனால் அவர் எதிர்கட்சி தலைவர்களை அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியது மக்களை முகம் சுழிக்க வைத்தது.
சாதனைகள்
அதிமுக அரசின் சாதனைகளை பாட்டியலிட்டு செந்தில்நாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறு வாசுகி கேட்டுக் கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் கழிவறையை சுத்தம் செய்யும் நடிகை என்னை தெரிகிறதா என்று கேட்டு வருகிறார் வாசுகி.