நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றி சொல்வேன்.. ரஜினி சுளீர்
நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றி சொல்வேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: அரசியலுக்கு வருவது பற்றி நேரம் வரும் போது சொல்வேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கடந்த வாரம் 16ம்தேதி முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இறுதி நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உள்ளதாகத் தெரிவித்தார். ஆனாலும் சிஸ்டம் சரியில்லையே என்று கூறினார்.
ரஜினியின் பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதற்கு திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மும்பை தாராவில் நாளை காலா படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள ரஜினி இன்று விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசியலுக்கு வருவது பற்றி நேரம் வரும் போது செல்வேன் என்று கூறினார்.