ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் குழு! ஆர்.எஸ்.பாரதிக்கும் இடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இதனிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நியமிக்க பத்துபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுகவின் ஆர்எஸ் பாரதியும் இக்குழுவில் இடம்பிடித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, டெரிக் ஓ பிரைன், சீதாராயம் யெச்சூரி, சரத் யாதவ் ஆகியோரும் இக்குழுவில் உள்ளனர்.
குடியரசு தலைவர் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை தேர்ந்தெடுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications