காமன்வெல்த் விவகாரம்: சென்னை, திருவாரூரில் மாணவர்கள் ரயில் மறியல்
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று கூறியும் சென்னை மற்றும் திருவாரூரில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
காமன்வெல்த் மாநாடு அடுத்த மாதம் இலங்கையில் நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழக கட்சியினர் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது நிலையை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு பாம்பே எக்ஸ்பிரஸை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதே போன்று காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையம் அருகே எர்ணாகுளம் - நாகூர் பயணிகள் ரயிலை தனி ஈழத்திற்கான மாணவர் போராட்டக் குழு மறித்து போராட்டம் நடத்தியது.












Click it and Unblock the Notifications